பெண்களை மோசமாக நடத்தியதாக தாலிபான் தலைவர்களை கைது செய்யப்போகும் சர்வதேச நீதிமன்றம்!

Date:

பெண்கள் மற்றும் யுவதிகள் துன்பறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு தாலிபான் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச குற்றவிவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களின் உயர்மட்டத் தலைவர் ஹைபதுல்லாஹ் அஹன்ட்ஸதா (Haibatullah AKHUNDZADA) மற்றும் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி (Abdul Hakim HAQQANI) இருவரும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகப்பதற்கான வலுவாக காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களையும் யுவதிகளையும் கிரிமினலாக கருதி துன்புறுத்துவதற்கும் பாலினம் தொடர்பான தாலிபான்களின் கருத்தியலுடன் ஒத்துப்போகாதவர்களை துன்புறுத்துவதற்கும் இவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...