மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை!

Date:

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை அதிகபட்சமாக 1 ரூபாய் 65 சதங்களுக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மாற்றுவதற்கான விதிமுறைகள் இயற்றப்படும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, புதிய விதிமுறைகள் விதிக்கப்படுவதால், மருந்துகளின் விலைகள் துறைமுகத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டுக்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு மருந்துப் பொருளுக்கும் விலை கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்வதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...