இலங்கைக்கான ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதி: ரஷ்யத் தூதுவருடன் சபாநாயகர் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். செகேரியன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்று முன்தினம் (25) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

1956ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி நீண்டகாலமாகக் காணப்படும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.செகேரியன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்த ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ரஷ்யா அண்மையில் வழங்கிய உர நன்கொடை உள்ளிட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...