காசாவில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: முதல்நாளில் 1 இலட்சத்துக்கும் மேல் மாணவர் பதிவு..!

Date:

ஒக்டோபர் 2023 தொடங்கிய இன அழித்தொழிப்புக்கு பின்னர் காசாவில் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 23இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் காசாவில் பல பாடசாலைகளிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

16 மாதங்களுக்கு பின்னர் காசாவில் 165 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. 16 மாத கால இன அழிதொழிப்பில் 12,800 மாணவர்களும் 800 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

காசாவின் 85 வீதமான பாடசாலைகள் (1166) முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. கல்வித்துறைக்கு இழப்பு மட்டும் 2 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...