ஒக்டோபர் 2023 தொடங்கிய இன அழித்தொழிப்புக்கு பின்னர் காசாவில் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 23இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் நாளில் காசாவில் பல பாடசாலைகளிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகை பதிவுசெய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
16 மாதங்களுக்கு பின்னர் காசாவில் 165 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. 16 மாத கால இன அழிதொழிப்பில் 12,800 மாணவர்களும் 800 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
காசாவின் 85 வீதமான பாடசாலைகள் (1166) முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. கல்வித்துறைக்கு இழப்பு மட்டும் 2 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.