சூடான் உள்நாட்டுப் போர்: மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலி

Date:

சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

வடக்கு ஆப்பிரிக்க நாடானில் அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப்படையினர் பதுங்கி இருந்து செயற்படுவதாக அந்த நாட்டின் இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் இராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து எறிகணைகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாட்களாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2023 ஆரம்பித்த சண்டையிலிருந்து 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை வெள்ளை நைல் நதியைக் கடந்து தப்பிச் செல்ல முயன்ற கிராம மக்கள் மீது துணை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...