நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், செயல்முறை இயல்பாக்கப்படும் என்றும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான பணிகள் ஏற்கனவே படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தனது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இன்று கூடியபோது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே முதன்மையான நோக்கமாக 24 மணி நேரமும் பயண அனுமதி வழங்கல் தொடங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...