இஸ்லாமிய மார்க்க போதகர் டாக்டர் ஜாக்கீர் நாயக் உரை நிகழ்த்த தடை இல்லை: மலேசிய உள்துறை அமைச்சர் தகவல்

Date:

இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் டாக்டர் ஜாக்கீர் நாயக் மலேசியாவில்  உரை நிகழ்த்துவதற்கு எந்தவொரு தடையும் பிறக்கப்படவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அவர் உரை நிகழ்த்துவதற்கு எதிராக தற்காலிக தடை போடப்பட்டிருந்தது. ஆனால் நடப்பில் அந்த தடையானது அமலில் இல்லை என்று சைஃபுடின் நசுத்தியோன் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, இஸ்லாமிய போதகர்  டாக்டர் ஜாக்கீர் நாயக் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் உரையாற்ற 2019ஆம் ஆண்டு அரசாங்கம் போட்ட தடை இன்னும் அமலில் உள்ளதா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் கேட்ட கேள்விக்கு சைஃபுடின் இவ்வாறு பதிலளித்தார்.

இந்தியா மும்பையைப் பிறப்பிடமாக கொண்ட டாக்டர் ஜாக்கீர் நாயக் உலகளாவிய பிரபல பேச்சாளர் ஆவார். சமீபத்தில் டாக்டர் ஜாக்கீர் நாயக் குறித்து தவறான தகவலை சொன்னதற்கு பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் RM1.42 மில்லியன் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...