ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமொன்றை மள்வானை அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த கற்கை நெறி எதிர்வரும் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் காலை 09:30 – 10:30 நடைபெறவுள்ளதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கற்கை நெறி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:
1- நோன்பு பற்றிய பொதுவான அடிப்படைகள்
2- ரமழானின் சிறப்பு, அதன் விசேடங்கள், அதில் நோன்பு நோற்பதன் சட்டம் மற்றும் அம்மாதத்தை ஆரம்பித்து முடிக்கும் முறைகள்.
3- ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள்.
4- நோன்பை முறிக்கும் காரியங்களும் அவற்றுடன் தொடர்பு பட்ட விடயங்களும்.
5- நோன்பின் வகைகள்.
6- நோன்புடன் தொடர்பு பட்ட பொதுவான சட்டங்களும் நவீன சிக்கல்களும் அதை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களும்.
7- கேள்வி பதில் அமர்வு
குறித்த பயிற்சி முகாமில் வளவாளர்களாக கலாநிதி M.H.M Azhar (PhD) உஸ்தாத் M.A.A.M Zafar (BA, Al – Madina) உஸ்தாத் M.M.A Imthiyaz (BA – Al – Madina) உஸ்தாத் A.C Yasar (BA, M.Ed – Al – Madina) கலந்துகொள்ளவுள்ளனர்.