ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பணயக் கைதி!

Date:

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி  கடைசி பரிமாற்றத்தில் மேலும் 3 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ்  படையினர் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் ஓமர் வென்கெர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹன் ஆகியோராவர்.

அப்போது பணயக் கைதி ஒருவர் ஹமாஸ் படை வீரரொருவரின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ்   விடுவித்து வருகின்றனர்.

பதிலுக்கு நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. அண்மையில் அப்படி 3 பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர்.

அதில் ஒமர் ஷெம் டோவ் என்ற பணயக் கைதி, ஹமாஸ் படையை சேர்ந்த இரண்டு பேரின் நெற்றி பகுதியில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்.

விடுவிக்கப்பட்ட மூவருக்கும் சான்று அளிக்கப்பட்டது. அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் 505 நாட்கள் ஹமாஸ் பிடியில் இருந்துள்ளனர்.

ஒமர் மிகவும் மெலிந்து போயுள்ளார். ஆனால், உற்சாகமாக காணப்படுகிறார். பொசிட்டிவ் மனநிலையை அவர் கொண்டுள்ளார் என அவரது தந்தை கூறியுள்ளார்.

‘அதுதான் என் மகன் ஒமர். அவன் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவான். அதானல் ஹமாஸின் அன்பையும் பெற்றுள்ளான்’ என அவரது தாயார் கூறியுள்ளார்.

இந்தக் காட்சி பலரையும் ஆச்சரியத்திலும் உருக்கத்திலும் ஆழ்த்தியது. போரின் கோரப்பலனைச் சந்தித்த இரு தரப்பினரும், மனிதநேயத்தின் மெல்லிய கோட்டை ஒருசில தருணங்களாவது பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை இந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.

மேலும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் எவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்பதை இந்தக்காட்சி காட்டுகிறது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...