எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

Date:

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முதன்மை நோக்கமாமாக அமைந்தது.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எனைய கட்சித் தலைவர்களுக்கும் இடையில் ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ஏனைய கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...