எமது தேசத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்: சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

Date:

இலங்கையின் சுதந்திரத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கெம்பஸ் நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் புரிந்துணர்வுடனும், தியாகங்களுடனும் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் 77வது சுதந்திரத் தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை அடக்கு முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இன்னும் எமது நாடு பொருளாதார, கலாசார மற்றும் இதர துறைகளிலும் பின்தங்கிய நிலையினையே கண்டுள்ளது.

இதற்கு காரணம் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தனையின் வீரியம் குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக பல்லின அழகான சமூக கட்டமைப்பினை கொண்ட எமது தாய் நாட்டின் பெருமையை உலகறியச் செய்வது எமது கடமையாகும்.

எமது தேசத்தின் அடையாளமே எமது வேட்கை என்பதை புரிந்து எம்மில் காணப்படும் மாற்று சிந்தனைகளை புறந்தள்ளி இலங்கையின் பிரகாசத்திற்கும்,  புரிந்துணர்வு, அன்பு பறிமாற்றம், பரஸ்பரம் என்பனவற்றினை சிரம் கொண்டு பயணிக்கும் நாளாக இன்றைய சுதந்திர தினம் அமைய வேண்டும் என இல்ஹாம் மரைக்கார் மேலும் தமது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...