“ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்”: விவசாயிகளுக்காக விசேட வேலைத்திட்டம்

Date:

நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள “ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” தேசிய திட்டம் இன்று ஆரம்பமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக குறித்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) பொல்கஹவெல – ஹொதெல்லவில் உள்ள ஜயசுந்தராராம விகாரைக்கு முன்பாக தொடங்குகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வு விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெறுகின்றது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 566 கமநல சேவைப் பகுதிகளில் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு கையிருப்புகளைப் பராமரித்தல், உள்நாட்டு உணவு நுகர்வு மற்றும் விவசாய பயிர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு 23ஆம் திகதி வரை தெளிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...