காசாவில் கடுங்குளிரால் உயிரிழந்த 6 குழந்தைகள்: மொத்த எண்ணிக்கை 15ஐ எட்டியுள்ளது!

Date:

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது. காசா பகுதியில் குளிர்  காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ்   பேசுகையில், கடுமையான குளிரால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15ஐ எட்டியுள்ளது என்று கூறினார். மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

காசா நகரத்தில் உள்ள ‘நோயாளிகளின் நண்பர்கள்’ என்ற தொண்டு மருத்துவமனையின் இயக்குனர்  சையத் சலா பேசுகையில்,

கடந்த சில மணிநேரங்களில் கடுமையான குளிர் மற்றும் தங்குமிடங்களில் வெப்பமின்மை காரணமாக மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.

காசாவில் சமீபத்திய நாட்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் மிகவும் குளிரான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை நூற்றுக்கணக்கான கூடாரங்களை அழித்துள்ளது. பல அகதி முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது.

காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது. மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை  பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...