காசா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும்இ நிறுவனங்களையும் ஜம்இய்யத்துல் உலமா பாராட்டுகிறது

Date:

காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத இந்த மும்மொழிவானது பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதுடன் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் நீதிக்கோட்பாடு, சுய நிர்ணய உரிமை என்பவற்றை புறக்கணிப்பதாகவும் உள்ளது.

காஸா மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடானது நீதி, சமாதானம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் அரசுரிமைக்கான நியாயமான அபிலாஷைகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வுடன் துன்பங்களை அனுபவித்த காஸா மற்றும் பலஸ்தீன மக்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம். முன்மொழியப்பட்ட இடமாற்றத் திட்டம் அநீதியானது மட்டுமன்றி பிராந்தியத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.

பலஸ்தீன மக்களின் நிலம்,வீடுகள் மற்றும் இறையாண்மைக்கான உரிமைகள் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்கள், நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் மாநில உரிமைகளைப் பெற தங்களது ஆதரவை தீவிரப்படுத்துமாறு உலகளாவிய தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனச்சாட்சி உள்ள அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம்.

பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹு தஆலா வலிமைகளையும், பொறுமையையும், வெற்றியையும் வழங்குவானாக. அப்பகுதியில் நீதியும் நிரந்தர அமைதியும் நிலவட்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...