சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தினால் காலி முகத்திடலில் இன்று திங்கட்கிழமை (10) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரேபியாவினால் முன்மொழியப்பட்ட இந்த தினம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அழிந்து வரும் சிறுத்தை இனங்களை (lion, Panthera tigris, mountain lion, jaguar, cheetah, leopard, snow leopard) பாதுகாப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.
அரேபிய சிறுத்தையின் தாயகமாக கருதப்படும் சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.