சிறப்பாக நடைபெற்ற மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்வு

Date:

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால்  பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம‌ சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை தலைவர்  எஸ்.ஐ.எம். பஹ்மி தலைமையில் நடைபெற்றது.

04 ஆம் திகதி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ்.ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்புரையினை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உப செயலாளர்களில் ஒருவரும் தேசிய கல்வி நிலையத்தின முன்னாள் செயற்திட்ட அதிகாரியுமான ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் பிரதான அம்சமான 20 வருடத்திற்கு மேலாக சேவையாற்றும் 08 கிராம‌ சேவகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அனைத்து கிராம சேவகர்களுக்கும் தலா 2,000.00 ரூபாய் பெறுமதியான ஒரு வருடத்திற்குத் தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.

வழமைப் போன்று மாவனல்லை பிரதேச செயலகத்திற்கும் ஒரு வருடத்திற்கு தேவையான காகிதாதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜமாஅத் ஆண், பெண் அங்கத்தவர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் சுமார் 50 பேரளவில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...