ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவர் கென் பாலேந்திரா காலமானார்

Date:

முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Holdings Ltd) முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா (Kandiah (Ken) Balendra) காலமானார்.

கென் பாலேந்திரா என்று எல்லோராலும் அறியப்பட்ட இலங்கையின் பிரபல தொழிலதிபர் தனது 85 வயதில் காலமானார்.

1940 பெப்ரவரி 3ஆம் திகதி பிறந்த இவர் நாட்டிலும் பிராந்தியத்திலும் ஏராளமான நிறுவனப் பதவிகளை வகித்துள்ளார்.

கந்தையா கென் பாலேந்திரா 1998ம் ஆண்டு  இலங்கையில் மிக உயர்ந்த கௌரவ விருதான தேசமாண்ய விருதை பெற்றுள்ளார்.

இதேவேளை, நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முதல் இலங்கைத் தலைவராகவும், பிராண்ட்ஸ் லங்கா மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டுக் கழகத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கென் பாலேந்திரா ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக திகழ்ந்து வர்த்தகத்துறையில் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...