நிதி அமைச்சின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மாயம்: தேசிய கணக்காய்வு அலுவலகம்

Date:

நிதி அமைச்சின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்த 176 வாகனங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமைக் கணக்கியல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிதி அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் இருப்பு மற்றும் உரிமையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான 44 வாகனங்கள் டிசம்பர் 31, 2023 நிலவரப்படி பிற நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், நிதி அமைச்சில் இருந்து மற்ற நிறுவனங்களிடமிருந்து 11 வாகனங்களை கையகப்படுத்தியிருந்தாலும், அதுவும் முறையாக செய்யப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...