நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், செயல்முறை இயல்பாக்கப்படும் என்றும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான பணிகள் ஏற்கனவே படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தனது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இன்று கூடியபோது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே முதன்மையான நோக்கமாக 24 மணி நேரமும் பயண அனுமதி வழங்கல் தொடங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...