பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Date:

நாட்டில் பாதாள உலக கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

மேலும், 2023 ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 65 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்பதுடன் 2024 ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 56 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பழிவாங்கும் நோக்கத்தில் பாதாள உலகக் கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...