பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Date:

நாட்டில் பாதாள உலக கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

மேலும், 2023 ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 65 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்பதுடன் 2024 ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 56 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பழிவாங்கும் நோக்கத்தில் பாதாள உலகக் கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...