பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

Date:

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக்  குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைத் தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

2023  செப்டம்பர் 13, அன்று நேபாளத்திலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கா  சர்வதேச விமான நிலையத்தில்  “கணேமுல்ல சஞ்சீவா” கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரிடம் போலி பாஸ்போர்ட் இருந்ததுடன்,  தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தனிப்பட்ட விவரங்களும் இருந்தன.

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாக நம்பப்படும் “கணேமுல்ல சஞ்சீவா”, பின்னர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று, பின்னர் சர்வதேச ‘ரெட் வாரண்ட்’ சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...