மற்றுமொரு ஒற்றுமையின் சுதந்திர தினம்: உலப்பனை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில்

Date:

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் சமூக சேவை பிரிவான UDS நிறுவனம் பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

ஊரிலுள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் “NIDHAHAS TROPHY” கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று தலேகோட மைதானத்தில் அது நடத்தியது.

பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தலேகொட பாதையை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும், கொங்க்ரீட் மூலம் வீதி செப்பனிடும் வேலைத்திட்டம் மேற்கொண்டன.

சுதந்திர தின நிகழ்வுகள் மதகுருமார்கள், பாடசாலை அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் பாடசாலை வளாகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற UDS நிறுவனத்தின் “இக்ரா” செயற்திட்டம் மூலம் சுமார் 145 மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டன. இதில் இக்ரஹ் பாடசாலை மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் மாணவர்கள் பயனடைந்தனர்.

மேலும், தலேகொட வீதிக்கு வீதி விளக்குகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வும், குருந்துவத்த கங்க இஹல கோரல பிரதேச செயலகத்துக்கு நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...