முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம்; விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை

Date:

பிரபல பாதாள உலகக் குழு தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தரங்க லக்மால் என்ற நபரால் இந்த படம் முகநூலில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளமை சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...