முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம்; விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை

Date:

பிரபல பாதாள உலகக் குழு தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தரங்க லக்மால் என்ற நபரால் இந்த படம் முகநூலில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளமை சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...