ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்!

Date:

ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான  மூன்று நாள் பயிற்சி முகாமொன்றை மள்வானை அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த கற்கை நெறி எதிர்வரும் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் காலை 09:30 – 10:30 நடைபெறவுள்ளதுடன்  பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கற்கை நெறி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:

1- நோன்பு பற்றிய பொதுவான அடிப்படைகள்
2- ரமழானின் சிறப்பு, அதன் விசேடங்கள், அதில் நோன்பு நோற்பதன் சட்டம் மற்றும் அம்மாதத்தை ஆரம்பித்து முடிக்கும் முறைகள்.
3- ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டவர்கள்.
4- நோன்பை முறிக்கும் காரியங்களும் அவற்றுடன் தொடர்பு பட்ட விடயங்களும்.
5- நோன்பின் வகைகள்.
6- நோன்புடன் தொடர்பு பட்ட பொதுவான சட்டங்களும் நவீன சிக்கல்களும் அதை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களும்.
7- கேள்வி பதில் அமர்வு

குறித்த பயிற்சி முகாமில் வளவாளர்களாக கலாநிதி M.H.M Azhar (PhD) உஸ்தாத் M.A.A.M Zafar (BA, Al – Madina) உஸ்தாத் M.M.A Imthiyaz (BA – Al – Madina) உஸ்தாத் A.C Yasar (BA, M.Ed – Al – Madina) கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கற்கை நெறியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் பின்வரும் இணைப்பினூடாக முன்பதிவு செய்து கொள்ளவும்.

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...