ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையில் முசலி பிரதேச குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் முசலிப்பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்காக உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வுகள்உலக முஸ்லிம் லீக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் (கபூரி) தலைமையில் இன்று இடம்பெற்றன.

மன் /கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மன்/ ஹுனைஸ் நகர் வித்தியாலயத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர் சாலிஹ் அல் கர்னி மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 730 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...