ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையில் முசலி பிரதேச குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் முசலிப்பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்காக உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வுகள்உலக முஸ்லிம் லீக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் (கபூரி) தலைமையில் இன்று இடம்பெற்றன.

மன் /கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மன்/ ஹுனைஸ் நகர் வித்தியாலயத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர் சாலிஹ் அல் கர்னி மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 730 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...