ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையில் முசலி பிரதேச குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் முசலிப்பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்காக உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வுகள்உலக முஸ்லிம் லீக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் (கபூரி) தலைமையில் இன்று இடம்பெற்றன.

மன் /கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மன்/ ஹுனைஸ் நகர் வித்தியாலயத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர் சாலிஹ் அல் கர்னி மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 730 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...