ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையில் முசலி பிரதேச குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக முஸ்லிம் லீக் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் முசலிப்பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்காக உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வுகள்உலக முஸ்லிம் லீக் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் (கபூரி) தலைமையில் இன்று இடம்பெற்றன.

மன் /கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மன்/ ஹுனைஸ் நகர் வித்தியாலயத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கியஸ்தர் சாலிஹ் அல் கர்னி மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 730 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...