இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ என்ற ‘முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய கல்வி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை இஸ்லாமிய கல்வி மையத்தின் செயலாளர் ஃபர்ஸான் எம். ஹனிஃபா, தலைமையுரையை அஷ்ஷேக் இர்ஷாத் சஹாப்தீன், வெளியீட்டாளர் உரையை ஏ. ரஸீன் மொஹிதீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழிகளிலும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.