EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர் பதிவு செய்ய புதிய நடைமுறை

Date:

ஊழியர்‌ சேமலாப நிதியத்தின்‌ கீழ்‌ அங்கத்தவர்களைப்‌ பதிவு செய்யும்‌ (AH பதிவு செய்யும்‌) புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்‌ திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில்‌ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன்‌ தொடர்புகொண்டு ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்வதாக, இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின்‌ ஊடாக ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்வதன்‌ வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப்‌ பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...