T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாட இந்தியா பயணமான கஹட்டோவிட்ட வீரர்!

Date:

இந்தியாவில் பெங்களூர் மணிபாலில் நடைபெறவுள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாடுவதற்காக கஹட்டோவிட்டவைச் சேர்ந்த முபீன் மதனி இன்று இந்தியா புறப்பட்டார்.

நாளை 27 ஆம் திகதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எஸ்.எம் கிரிக்கெட்டர்ஸ் உட்பட ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன.

அந்தவகையில் C S cricket club அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முபீன் களம் இறங்குகின்றார்.

ஓர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று கலந்து கொள்ளும் முதலாவது கஹட்டோவிட்ட வீரர் இவராவார்.

முபீன் உள்ளூரில் Essex அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருவதுடன் பிரதேசத்தின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியான KPL போட்டிகளையும் முன் நின்று நடத்தி வருகிறார்.

முபீனின் இந்த பயணம் வெற்றி பெறவும் சாதனைகள் படைக்கவும் ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துகிறோம்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...