ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரசு பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 26 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கிழக்கு மாகாண ஆளுநர், விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்கான கல்விச் செயற்பாடுகள் 2025 மார்ச் 01 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், வட மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...