ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரசு பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 26 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கிழக்கு மாகாண ஆளுநர், விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்கான கல்விச் செயற்பாடுகள் 2025 மார்ச் 01 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், வட மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...