‘கடவுளுக்கு நன்றி’: இன்று விடுதலையாகும் இஸ்ரேலிய பணய கைதிகள்!

Date:

ஹமாஸ் இயக்கம் ஏற்கனவே அறிவித்தது போல இன்று விடுதலையாகும் மூவரில் ஒருவர் யார் என்பது பற்றிய தகவலை சகோதர இயக்கமான சரயா அல் குத்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த பயணக் கைதி விடுதலையாகும் அந்த செய்தி அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி இது.

இதேவேளை காசாவின் மத்தியப் பகுதியான கான் யூனூஸ் பகுதியில் இந்த மூவரை விடுதலை செய்கின்ற உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியள்ளன.

ஹமாஸ் இயக்கம் சகோதர இயக்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

ஏற்கனவே ஐந்து குழுக்கள் விடுதலை செய்த நிலையில் இன்று 6வது குழுவில் மூன்று பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க அதாவது சனிக்கிழமையன்று அனைத்து பணயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எச்சரிக்கைக்கு மாற்றமாக 3 பேர் மாத்திரமே விடுதலை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகள் யாஹர் ஹரன் , அலெக்சாண்டர் ருபெனோ, சஹொய் டிகெல் ஷென் ஆகிய மூவரை ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது.

இதேவேளை, அதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுபகிறது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...