ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவர் கென் பாலேந்திரா காலமானார்

Date:

முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Holdings Ltd) முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா (Kandiah (Ken) Balendra) காலமானார்.

கென் பாலேந்திரா என்று எல்லோராலும் அறியப்பட்ட இலங்கையின் பிரபல தொழிலதிபர் தனது 85 வயதில் காலமானார்.

1940 பெப்ரவரி 3ஆம் திகதி பிறந்த இவர் நாட்டிலும் பிராந்தியத்திலும் ஏராளமான நிறுவனப் பதவிகளை வகித்துள்ளார்.

கந்தையா கென் பாலேந்திரா 1998ம் ஆண்டு  இலங்கையில் மிக உயர்ந்த கௌரவ விருதான தேசமாண்ய விருதை பெற்றுள்ளார்.

இதேவேளை, நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முதல் இலங்கைத் தலைவராகவும், பிராண்ட்ஸ் லங்கா மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டுக் கழகத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கென் பாலேந்திரா ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக திகழ்ந்து வர்த்தகத்துறையில் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...