தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மே மாதத்தில்!

Date:

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டமை ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இந்த மனுக்கள் இன்று பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.

இதன்போது, தேசபந்து தென்னக்கோன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், இந்த மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

கார்டினல் மால்கம் ரஞ்சித், இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...