நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், செயல்முறை இயல்பாக்கப்படும் என்றும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான பணிகள் ஏற்கனவே படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தனது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இன்று கூடியபோது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே முதன்மையான நோக்கமாக 24 மணி நேரமும் பயண அனுமதி வழங்கல் தொடங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...