பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபருக்கு விளக்கமறியல்!

Date:

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சீல் வைக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களை வேண்டுமென்றே குளறுபடி செய்து தம்புத்கம பிரதேசத்தில் உள்ள கல்வி வகுப்பு ஆசிரியருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி அரசாங்கத்திற்கு 11.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதால் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...