அநுராதபுரம் வைத்தியசாலை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ;முன்னாள் இராணுவ வீரர் கைது!

Date:

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital – Anuradhapura) வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பெண் வைத்தியர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவத்திற்கு நீதி கோரியும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...