இன்றைய சூழலில் தாய்மாரையும் அறிவூட்டுவது அவசியமானதாகும்: ரமழான் கால பயிற்சிநெறி இறுதிநாள் நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத்

Date:

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம் இந்த ரமழானில் ஏற்பாடு செய்த சிறுவர்களுக்கான ரமழான் பாடநெறியையும் தாய்மார்களுக்கான 7 நாள் பாடநெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான பரிசில்கள் வழங்குவதற்கான நிகழ்வு மார்ச் 23ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய காலத்தின் தேவை கருதி இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

ரமழான் காலம் பிரயோசனமாக கழிய வேண்டும் என்ற வகையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இமாம் ஷாபி நிலையமும் சிறுவர்களுக்கு வேறாகவும் தாய்மார்களுக்கு வேறாகவும் தனித்தனியாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சிகளின் ஊடாக வெவ்வேறு தலைப்புக்களில் இரு சாராருக்கும் விரிவுரைகளின் ஊடாக அறிவூட்டப்பட்டதோடு ரமழான் காலத்தை பிரயோசனமாக கழிப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

துறைசார்ந்த வளவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் இறுதி நாள் வைபவத்துக்கு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி) அவர்கள் தலைமை தாங்கினார்.

இதன்போது இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் டாக்டர் ரிஷாத் (MD) அதிபர் எம்.எஸ்.எம். அஸ்கர், டாக்டர் பாரிஸ் உட்பட பல பிரமுகர்களும் சிறப்பான இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...