காசா படுகொலைகளை எதிர்த்து ஜம்இய்யதுல் உலமா கண்டன அறிக்கை!

Date:

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காசா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டித்துள்ளது.

பலஸ்தீன் காசா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை  எதிர்த்து ஜம்இய்யத்துல் உலமா கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலஸ்தீன் காஸா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்கள், வைத்தியசாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் மீது ஆக்கிரமிப்பு இராணுவம் நிகழ்த்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தொடர்ந்தும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈவிரக்கமின்றி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான, எவ்வித நியாயங்களும் கற்பிக்க முடியாத இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிப்பதோடு, இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு அப்பாவி உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறித்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...