சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்

Date:

ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது.

இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பசுபிக் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இந்த சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பிலான போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் உள்ளூரிலும் பிராந்திய ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சட்டபீடங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றில் 20 அணிகள் சர்வதேச போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்றன.

ஹொங்கொங் செஞ்சிலுவை சங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி இன்றிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும்.

இப்போட்டியில் நீர்கொழும்பை சேர்ந்த ஹுஸ்னி ஸராப் ஆசிரியரின் புதல்வி  ஹம்னா அஸூர் போட்டியில் வாதிடுபவராக (Mooter) கலந்துகொள்கிறார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...