பாவங்கள் மன்னிக்கப்படும் ரமழானின் வருகையையிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் – சவூதி தூதுவர்

Date:

அருளும், கருணையும், மன்னிப்பும் நிறைந்த ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கை மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த புனித மாதத்தில், நற்செயல்கள் பரவிப் பெருகுகின்றன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, இந்த மாதத்தில் இறைவனின் புனித அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் மாபெரும் மகிழ்ச்சி நினைவுகூரப்படுகிறது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அதில் உள்ளது. ரமழானில் போட்டி போட்டுக் கொண்டு நற்செயல்கள் செய்யுமாறு ஆர்வமூட்டுகின்ற தலைசிறந்த போதனைகள் உள்ளன.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதத்தில், அனைவருக்கும் இறைகருணையும், நிம்மதியும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் காலங்களிலும் மீண்டும் மீண்டும் இந்த ரமழான் என்ற பாக்கியம் எம் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்றும், அது சுமந்து வரும் நன்மைகளையும் அருள்களையும் அடைந்துகொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சுகிறேன்.

மேலும், இந்த ரமழானில் நோன்பு பிடித்து, நின்று வணங்கி, நல்லமல்கள் செய்யும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தருமாறும் வேண்டுகிறேன். மேலும், அல்லாஹ் அவற்றை ஏற்று அங்கீகரிப்பானாக!

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...