பெண் வைத்தியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

Date:

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணும் நேற்றிரவு இரவு கல்னேவவின் நிதிகும்பயாய பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபரான கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர், இன்று (13) அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கல்னேவ காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை பொலிஸார் மீட்டனர். சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...