முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தினம்: நினைவுகளை மீட்டெடுக்கும் புத்தளம் மரிக்காரின் அர்த்தமுள்ள கவிதை

Date:

இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட தினம் நாளை மார்ச் 31 ஆகும்.

அந்த வேதனையான தினத்தை நினைவுகூரும் வகையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் எழுதிய அர்த்தமுள்ள கவிதையை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

அந்த வேதனையான நாட்கள் இன்றும் மனங்களில் அழியாத வலியாக நிற்கின்றன. மண்ணுக்கு அர்ப்பணிக்க முடியாமல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சோதனைகளை கவிஞர் தனது வரிகளில் பதிவு செய்துள்ளார்.

நினைவு கீதம்..!
5 ஆண்டு நிறைவு கீதம்..!!

—-
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
###
விதிகளை மாற்றினாய்…
விஞ்ஞானத்தை
கொழுத்தினாய்…
பிறந்த பிஞ்சுகளை
பற்றவைதாய்…
உரிமைகளின்
குரல்வளை கடித்தாய்…!!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
குருதி கொதித்த நாள்…!
எம் கூட்டை சிதைத்த நாள்…!
கட்டாயத் தகனத்தில்…
இலங்கை வரலாறே எரிந்த நாள்…
துஆ செய்ய… தாயின்
சாம்பலை தேடும் நாள்..
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
நஞ்சைப் பார்த்தோம்…!
சூரியனே நெஞ்சில் சுட்ட
சூடு உணர்ந்தோம்…!
ஆயிரம் ஆண்டு…
அமைதிச் சமூகம்…
தீயிற்கு
தின்னக் கொடுக்கப்பட்டோம்..!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
——–
காலத்தால்…
நிகழ்வுகள் மறந்துபோகலாம்…
நிஜங்கள் புதைந்து போகக்கூடாது…!
வலிகளை நினைவுகூர்வோம்…
இனியேனும் நிகழாதிருக்க…!
இந்த வரலாற்றை பதிவுசெய்வோம்…!!
—-
எழுத்து இயக்கம்,
புத்தளம் மரிக்கார்.
30-03-2025

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....