ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து விலகிய நீதிபதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உறுப்பினரான நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதால், அவர் இல்லாத நீதிபதிகள் குழு முன் இந்த மனுவை மே 9 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியின் சட்டத்தரணி சேனக வல்கம்பயவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றில் 05 வெற்றிடங்கள் காணப்படுவதாக மனுதாரர் ஜனாதிபதி சட்டத்தரணி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நீதித்துறை வெற்றிடங்களை அப்போதைய ஜனாதிபதி நிரப்பத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...