அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

Date:

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தீர்மானித்துள்ளது.

2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வை கண்டித்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை காலை 8:00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க GMOA வின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், போராட்டம் நாளை காலை 8:00 மணி வரை நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளில் அமுலில் இருக்கும்.

எனினும், போராட்டத்தினால் அவசர சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது.

மேலும், ஆபத்தான நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் GMOA சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இந்த வேலைநிறுத்தம் சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகளுக்குப் பொருந்தாது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...