இறந்த உடலுக்கு அருகில் பல மணிநேரங்கள் கழித்த விமான பயணிகள்: மன்னிப்புக் கோரிய கத்தார் விமான சேவை

Date:

மெல்போர்னிலிருந்து கத்தார் விமான சேவையினூடாக தோஹா நோக்கி கணவன் மனைவி இருவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சக பெண் பயணி ஒருவர் திடீரென இறந்துவிட்டார்.

இந்த பெண்ணின் உடலை வணிக வகுப்பு (Business Class) பகுதிக்கு மாற்ற விமான பணியாளர்கள் முயற்சித்தனர்.

எனினும் இறந்த பெண்ணின் உடல் பருமனாக இருந்ததனால் அது சாத்தியப்படவில்லை. இதன் காரணமாக அவ்வுடலை இக்கணவன் மனைவி பக்கத்திலேயே வைத்துவிட்டனர்.

விமானம் தரையிறங்கியதன் பின்னரும் கூட அம்பியூலன்ஸ் பணியாளர்கள் வரும் வரையில் இவ்விருவரும் இந்த உடலக்கு அருகில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இச்சம்பவமானது தமக்கு மிகுந்த வேதனைகளையும் மன உளைச்சலையும் தந்ததாக இவ்விருவரும் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த சம்பவத்தில் ஏற்பட்ட அனைத்து தவறுகளுக்கும் வருந்துவதாக காத்தார் விமான சேவை அறிவித்துள்ளது.

அல்ஹுர்ரா செய்திச் சேவை கத்தார்.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...