எரிபொருள் விநியோகஸ்தர்களினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மனு..!

Date:

எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசிய எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத் தீர்க்க எரிபொருள் வணிக சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...