ஐநா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்

Date:

கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு, வீடு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உடனடி மற்றும் நிரந்தர உதவிகளை கோரியே அவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி, ஆனால் தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம், எங்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற அரசு ஆதரவு தேவை உட்பட தங்கள் துயரங்களை தெரிவிக்கும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

உயிர்வாழ்வுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தீர்வுகளை அரசும், சர்வதேச சமூகமும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் என சொல்லப்படும் அகதிகள் 115 பேர், இலங்கையின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் வந்து தரையிறங்கி, இலங்கையில் தஞ்சமடைந்தனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...