சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்

Date:

ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது.

இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பசுபிக் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இந்த சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பிலான போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் உள்ளூரிலும் பிராந்திய ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சட்டபீடங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றில் 20 அணிகள் சர்வதேச போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்றன.

ஹொங்கொங் செஞ்சிலுவை சங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி இன்றிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும்.

இப்போட்டியில் நீர்கொழும்பை சேர்ந்த ஹுஸ்னி ஸராப் ஆசிரியரின் புதல்வி  ஹம்னா அஸூர் போட்டியில் வாதிடுபவராக (Mooter) கலந்துகொள்கிறார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...