ஞாயிறன்று உலகின் எப்பாகத்திலும் பெருநாள் வருவதற்கான சாத்தியம் இல்லை..!

Date:

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட  சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது

அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுவதால் சந்திரன், சூரியன் மறைய முன்னரே மறைந்துவிடும் என அது தெரிவித்துள்ளது.

வெற்றுக் கண்ணாலோ டெலஸ்கோப்பினாலே (Telescope) அல்லது வேறு எந்த வழியிலோ அன்றையதினம் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சவூதியின் வானியல் ஆய்வாளர் பத்ர் அல் உமைரா அவர்களும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ரமழான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 31 ஆம் திகதி திங்கட்கிழமையே பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைப்பிறை பார்க்கும் மாநாடு நடைபெறவிருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்று பிறை தென்பட்டால் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...