ஞாயிறன்று உலகின் எப்பாகத்திலும் பெருநாள் வருவதற்கான சாத்தியம் இல்லை..!

Date:

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட  சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது

அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுவதால் சந்திரன், சூரியன் மறைய முன்னரே மறைந்துவிடும் என அது தெரிவித்துள்ளது.

வெற்றுக் கண்ணாலோ டெலஸ்கோப்பினாலே (Telescope) அல்லது வேறு எந்த வழியிலோ அன்றையதினம் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சவூதியின் வானியல் ஆய்வாளர் பத்ர் அல் உமைரா அவர்களும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ரமழான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 31 ஆம் திகதி திங்கட்கிழமையே பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைப்பிறை பார்க்கும் மாநாடு நடைபெறவிருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்று பிறை தென்பட்டால் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...