தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) புதிய பரிபாலன சபை அங்கத்தவர்கள் நியமனம்!

Date:

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) 01/2024ம் சட்ட ஏற்பாட்டிற்கமைய புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நீதியமைச்சில் இடம்பெற்றது.

நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் தலைவராக பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, வணக்கத்திற்குரிய ஓமரே புன்னஸிரீ தேரர் , அருட்தந்தை கிரேஸியன் காப்ரியேல் அன்டோனிடோ அருள்ராஜ் குரோஸ், பேராசிரியர் டபிள்யூ. ஏ.டீ. ஷேர்லி லால் கிரிகோரி விஜேசிங்க, பேராசிரியர் பரீனா ருஸைக்,  கலாநிதி மனோஜி ஹரிஸ் ஷந்தர, சுசித் அபேவிக்கிரம, ஹாஷிம் ஸாலிஹ் ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் கலாநிதி விஜித் ரோஹன் பெர்னாண்டோ அவர்களும்  நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...