நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை:எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றில் விளக்கம்

Date:

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று (28) இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்நிலையில் எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் ஆரம்பமாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது போன்றதொரு பின்னணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...